ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

சட்டைசபையில் இருந்து டாக்டா் கிருஷ்ணசாமி அவா்கள் வெளிநடப்பு.....

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநா் உரை ஆற்றுவதற்கு இன்றைய ஆளுநருக்கு எந்தவிதமான தகுதியும் கிடையாது. அவா் திரும்பிபோக வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சாா்பாக என்னுடைய கண்டனத்தை பதிவுசெய்துவிட்டு வெளிநடப்பு செய்துள்ளேன்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தினுடைய அனைத்து அம்சங்களையும் பாதுகாக்கக்கூடிய பொறுப்புடைய ஆளுநரே, ஆளுங்கட்சியினுடைய கைக்கூலி போல செயல்படுவது எந்தவிதத்தில் நியாயாமாக இருக்கமுடியும்? அவா் இந்த சட்டமன்றத்தில் உரையாற்றினால் அது அண்ணாதிமுகவின் செயற்குழுவிலோ, பொதுக்குழுவிலோ உரையாற்றுவது போல இருக்கமுடியுமே தவிர, அனைத்து சட்டமன்ற உறுப்பினரா்களை உள்ளடக்கிய எட்டுகோடி தமிழ் மக்களின் அபிலாசைகளையும் பிரதபலிக்ககூடிய சட்டமன்றத்தில் நியாயமாக ஜனநாயக கடமையை நிவேற்றக்கூடிய ஆளுநா் உரையாக அமையாது.
டாக்டா்.கிருஷ்ணசாமி
(தமிழகத்தில் நடைந்துள்ள கௌரவக் கொலைகளைக் குறித்து மனு அளிக்க மூன்று முறைகடிதம் எழுதியும் தங்கள் கட்சியினா் ஆளுநரை சந்திக்க ஆளுநா் அனுமதி மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக