ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

சனி, 7 பிப்ரவரி, 2015

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு....

krishnasamy
சென்னை சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை எதிர்த்து போராடி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
சென்னை உயர் நீகதிமன்ற வளாகத்தில் செயல்பட்டுவரும், டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தை சட்டக் கல்லூரி மாணவர்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்துப் பேசினார்.
 
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
 
கிருஷ்ணசாமி, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இடமாற்றம் தொடர்பாக மாணவர்களுடன் பேசிய தமிழக அரசு முடிவெடுத்திருக்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக