ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்ப முயற்சி:

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்ப முயற்சி:டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள். குற்றச்சாட்டு...
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A .,அவர்கள். குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் வழக்கறிஞர் மாளவியாவை சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. பொறியியல் மாணவர் கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை காப்பாற்றுவதற்காக 3 மாத காலம் என்ன நடவடிக்கையை இந்த காவல்துறை எடுத்து வந்ததோ, அதேபோல டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணத்திற்கு காரணமானவர்களையும் காப்பாற்றுவதற்கு உண்டான நடவடிக்கையிலும் இறக்கியிருக்கிறார்கள்.
இப்படி சுற்றி வலைத்து யாராவது ஒருவரை பலிகாடாக்கி அந்த வழக்குகளை முடிப்பதற்காக முயற்சி செய்கிறார்கள். அது தவறானது. என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக