ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

மத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்யவேண்டும்,'' புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி M .D . M .L .A ., அவர்கள்,

மத்திய அரசு, 'ஆன்-லைன்' மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்யவேண்டும்,''
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி M .D . M .L .A ., அவர்கள், 
பல்லடத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி தங்கவேல், அவரது மகளான, 13 வயது சிறுமி மகாலட்சுமி ஆகியோர், கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை பெற்றுத்தரவேண்டும்.
இன்ஜினியர் கோகுல்ராஜ் கொலை மற்றும் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்.
கேரள மாநிலத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கு, 301 ரூபாய் ஒரு நாள் சம்பளமாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த, தொழிலாளர் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மத்திய அரசு, ஆன்லைன் மருந்து விற்பனையை முற்றிலும் தடை செய்யவேண்டும். இவ்வாறு, டாக்டர் கிருஷ்ணசாமி M .D . M .L .A .,அவர்கள் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக