ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா ?... தமிழ் தேசிய அரசியல் சாத்தியமா ?.

தமிழ்நாட்டில் மூன்றாவது அணி சாத்தியமா ?... தமிழ் தேசிய அரசியல் சாத்தியமா ?.
திமுக அணி, அதிமுக அணி என்ற இரண்டைத்தாண்டி எந்த ஒரு அணியும் தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இந்த கருத்தை பலமுறை இடைத்தேர்தல்களில் பல கட்சிகள் உறுதிப்படுத்திக்கொண்டுள்ளன.
எந்த இடைத்தேர்தலாக இருந்தாலும் அதில் அதிமுகவும் திமுகவுமே மோதுகின்றன. பெரும்பாலும் எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ அதுவே வெல்கிறது. எந்தக் கட்சி எதிர்கட்சியாக இருக்கிறதோ அது பெரும் முயற்சியில் இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொள்கிறது. ஆனால், சில மாதங்களுக்குப் பின்னர் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தோசை திருப்பிப் போடப்பட்டுவிடுகிறது.... வாக்குகள் திசை மாறுகின்றன .... இதில் பெரும்பாலும் சாதி வாக்குகள் தான் தீர்மானிக்கின்றன .... தமிழகத்தில் பார்பனர் , பார்பனர் அல்லாத அரசியல் என்பது திசை மாறி , ஆதிக்க சாதி அரசியல்தான் இரண்டு திராவிட கட்சிகளும் நடத்துகின்றன ... இடஒதுக்கீடு என்பது தமிழகத்தில் கேலி கூத்து .. தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு எந்த ஒரு கட்சியும் அனைத்து பிரிவினருக்கும் உ ரிய பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை ...அதிகாரம் இழந்த மக்கள் தனி அரசியல் அமைப்பாக திரள்வது காலத்தின் கட்டாயம் ஆகிறது .. அந்த வகையில் டாக்டர் . க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் சமரசமற்ற போராட்டம் , வலிமையான வாக்கு வங்கியாக பரிணாமம் அடைத்துள்ளது ... தேர்தல் நேரத்தில் தேர்தலை சந்திக்க ஏற்படுத்தும் தேர்தல் உ டன்பாடு தவிர்க்க முடியாதது ஆகிறது .. பகுஜன் தத்துவம் பேசலாம் , தனித்து போட்டி என்று சொல்லலாம் , மீண்டும் , மீண்டும் திராவிட கட்சிகளோடு தேர்தல் உ டன்பாடா ..? என்று சொல்லலாம் , ஆனால் நிலைமை என்ன ..?.. இன்று உ ள்ள தேர்தல் முறையில் நடைமுறை சாத்தியம் இல்லை ... விகிதாசார பிரதிநிதித்துவ முறை இருந்தால் இந்த கேள்வியே எழாது .. தேவேந்திர குல மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வாக , நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளோடு தேர்தல் உ டன்பாடு செய்து கொள்ளலாம் ... அதற்க்கு புதிய தமிழகத்தை வலுப்படுத்துவதை தவிர வேறு வழிஇல்லை..... என்றும் புதிய தமிழகம் தனது தன்மையை இழக்காது ..தேவேந்திர குல மக்களின் மனநிலையை அறிந்து , தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணை , பட்டியல் மாற்றம் , தேசிய தலைவர் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு அரசு விழா , பாராளுமன்றத்தில் சிலை , மதுரை விமான நிலையத்திற்கு தேசிய தலைவர் இம்மானுவேல் சேகரன் அவர்களின் பெயர் சூட்ட கோரிக்கை , தேவேந்திர குல சமுகத்திற்கு தனி நிதி ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்கள் விருதுநகரில் தொடங்கி மாநிலம் முழுவதும் பேரணி , பொதுக்கூட்டங்களை நடத்துகின்றார் ... தேவேந்திர குல சமுக மக்கள் அலைகடலென திரண்டு ஆதரவு தாரீர் ...!!!... ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அரசியல் அதிகாரம் பெறுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக