ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் .

சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் டாக்டர் க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் ......தேவேந்திர குல வேளாளர் . மற்றும் சக ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான மீது குண்டர் சட்டம் போடுவதை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி ..M .D .M .L .A .. அவர்கள் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து க. கிருஷ்ணசாமி M .D .M .L .A .. அவர்கள் . நிருபர்களிடம் கூறியதாவது:-
பரமகுடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, 20 இடங்களில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ‘பேனர்’கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த ‘பேனர்’களுக்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளே, அந்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டிருந்தனர். இதனை புதிய தமிழகம் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கதிரேசன் தட்டிக்கேட்டார். இதன் விளைவாக கதிரேசன் தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கதிரேசன் ஏற்கனவே ராமநாதபுரத்தில் தேவேந்திர குல மக்களுக்காக பல போராட்டங்கள் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேவேந்திர குல மக்கள் மீதும், அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீதும் குண்டர் சட்டம் போடுவது கண்டிக்கத்தக்கது. எனவே கதிரேசன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதுவரை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி .. அலை செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக