ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம்...!!!.

தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம்...!!!. மாவட்ட வாரியாக தேதி மற்றும் நடைபெறும் இடங்கள்.... மாவட்ட ஒன்றிய , நகர பொறுப்பாளர்கள் தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை வெற்றியடைய , அதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டுகிறோம் ...!!!.
💥பள்ளர், குடும்பர், காலாடி, பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என ஆறு விதமான பெயர்களில் அழைக்கப்படும். ஒரே இன மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைத்திட வேண்டும்.
💥எம் இன மக்களை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கி சிறப்பு பட்டியல் உருவாக்கி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
💥மருதநில மக்கள் எனும் நெல்லின் மக்களாம் தேவேந்திரகுல வேளாளர்களின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மத்திய, மாநில அரசுகள் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
💥தேசிய தலைவர் தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். அவருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும்.
ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் தலைமையில் தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்புப் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
*நவம்பர்-25 நெல்லை.
*டிசம்பர்-03 தூத்துக்குடி
.
*டிசம்பர்-05 விருதுநகர்
.
*டிசம்பர்-10 இராமநாதபுரம்
.
*டிசம்பர்-15 திருச்சி
.
*டிசம்பர்-17 மதுரை
.
*டிசம்பர்-19 திண்டுகல்
.
*டிசம்பர்-24 தேனி.
*டிசம்பர்-27 கரூர்
.
*ஜனவரி-05 தஞ்சாவூர்
.
*ஜனவரி-06 திருவாரூர்.
*ஜனவரி-07 பெரம்பலூர்.
*ஜனவரி-08 நாமக்கல்
.
*ஜனவரி-09 சேலம்
.
*ஜனவரி-10 ஈரோடு
.
குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் மாலை மூன்று மணிக்கு பேரணி துவங்குகிறது.
ஓரு கோடி தேவேந்திரகுல மக்களின் அடையாளம் மீட்டெடுக்க, அரசியல் அதிகாரம் வென்றெடுக்க, அரசியல் பாகுபாடின்றி அலைகடலென திரண்டு வாரீர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக