ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

அகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதா?!

அகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியதற்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதா?!
புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட செயலாளர், ஒன்றியச்செயலாளர், நகரச்செயலாளர்கள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
சமீப காலமாக ஒடுக்கபட்ட மற்றும் தேவேந்திர குல வாலிபர்களை குறி வைத்து பெட்டிகேஸ் முதல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள். இது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
ராமநாதபுரம் மாவட்ட புதிய தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்றால் பிளக்ஸ்போட்டு வைத்தல், அகற்றப்பட்ட மாநகராட்சி இடத்தில் குடியிருந்தவர்களுக்கு மாற்று இடம் வேண்டி போராடியது தான்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமானால் இந்திய இறையாண்மைக்கு எதிராக நடத்தல், ஆயுதம் தாங்கி போராடுபவர்கள் மீது தான் பாய வேண்டும். ஆனால் சாதாரண வழக்கில் கூட தாழ்த்தப்பட்ட வாலிபர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இதற்கு அரசின் உள்நோக்கம் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் தேவேந்திர குல வாலிபர்களை குறி வைத்து கைது செய்யப்படுவதை கண்டித்து சென்னையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் 19–ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்திய உள்துறை அமைச்சகத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக