ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் குற்றச்சாட்டு.

சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை:
டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்கள் குற்றச்சாட்டு.
தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிப்பதாக கூறி புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் , அவையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரமில்லா நேரத்தின்போது தம்மை பேச அனுமதிக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கோரிக்கை வைத்தார். இதற்கு அனுமதி மறுத்ததால் அவர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார். அவையின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிப்பதாக கூறி அவரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சட்டமன்றத்தில் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் பேசுவதற்கு இடமே இல்லை என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக