ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

டெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த வரலாற்று நிகழ்வு ...!!!

டெல்லியில் புதிய தமிழகம் கட்சி போராட்டம்., ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த வரலாற்று நிகழ்வு ...!!!
இலங்கை தமிழர்களுக்காக, டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் 2009 அக்டோபர் 2ம் தேதி அன்று நடத்திய ஐந்து நிமிடம் போராட்டம். உலகத்தில் பல நாடுகள் மற்றும் ஐநா சபை திரும்பி பார்க்க வைத்த போராட்டம்.
இந்த போராட்டத்திற்க்காக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது. அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், உலக நாடுகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இந்த போராட்டம் முடித்து விட்டு, சென்னை திரும்பிய டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A .,அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லியில் உள்ள இலங்கை தூதரகம் தாக்க பட்டு , அதில் அலுவலக கண்ணாடி உடைந்தது, பூந்தோட்டி உடைந்தது என்று உலகத்தில் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கையில் பல லட்சம் தமிழர்களை ராஜபக்சே கோன்ற போது. இந்த உலக நாடுகள் எங்கே போனது என்று கேள்வி எழுப்பினார்.
இந்த போராட்டத்திற்க்காக இன்று வரை டெல்லி நீதிமன்றத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி M .D .M .L .A .,அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் வி.கே அய்யர் அவர்கள், கரூர் பாண்டியன், தஞ்சை குணா, திருச்சி அய்யப்பன், திருச்சி சங்கர் உட்பட 12 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக