ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல் ..

விஷ்ணுபிரியா வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் . டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல் ..
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தற்கொலை செய்துகொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவின் வீடு கடலூர் அருகே கோண்டூரில் உள்ளது.
அவரது வீட்டுக்கு சனிக்கிழமை புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் வந்திருந்தார்.
அங்கு விஷ்ணுபிரியாவின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் .க .கிருஷ்ணசாமி . M .D .M .L .A ., அவர்கள் கூறியது: விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக செயல்பட்ட கோகுல்ராஜ் கொலை வழக்கில், குற்றவாளிகளை நெருங்கும் நேரத்தில் உயரதிகாரிகளால் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பான வழக்கில் சம்பந்தமில்லாத 4 பேரை குண்டர் தடுப்புக்காவலில் அடைக்க விஷ்ணுபிரியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
மனசாட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட கொடுக்கப்பட்ட நெருக்கடியே அவரது மரணத்துக்குக் காரணம். எனவே இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்று கருதுவதால், சிபிஐ விசாரணை கோருகிறோம்.
இச்சம்பவம் காவல் துறையில் பெண்கள் பணியாற்ற அச்சப்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
அப்போது, கட்சியின் மாவட்டச் செயலர்கள் எம்.வி.ராஜா, ச.வெற்றிசெல்வன், மாநில இளைஞரணிச் செயலர் பாஸ்கர்மதுரம், மாவட்ட துணைச் செயலர்கள் ர.சுதாகர், எஸ்.பாலமுருகன், நகரச் செயலர் கு.அ.ஜெகன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக