ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

மலேசியாவின் மலாக்கா பகுதியில் வாழ்ந்து வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் அண்ணன் கிருஷ்ணாசாமி அவர்களின் உறவினர்களோடு!!!.....

மலேசியாவின் மலாக்கா பகுதியில் வாழ்ந்து வரும் புதிய தமிழகம் கட்சி தலைவர் அண்ணன் கிருஷ்ணாசாமி அவர்களின் உறவினர்களோடு!!!........
இதில் என்ன நகைச்சுவை என்றால்,
மருத்துவர் கிருஷ்ணசாமியை தெலுங்கர் என தமிழ்நாட்டில் பரப்பியதோடு நிற்காமல்,
உலகம் முழுவதும் பரப்பியுள்ளனர் கிறுக்கர்கள் சிலர்!......
கிருஷ்ணசாமி தெலுங்கரா?
என்ற கேள்வியை மலேசியாவில் மள்ளர்கள் மட்டுமல்லாது தமிழ்த் தேசியம் பேசும் பலரும் கேட்டனர்...
நான் அவர்கள் அனைவருக்கும் சொன்னது ஒன்றே ஒன்று தான்,
மருத்துவர் கிருஷ்ணசாமி தெலுங்கர் என்றால்,
அவரது உறவினரான நானும் தெலுங்கர் தான் என்றேன்!!!.....
மேலும்,
கிருஷ்ணசாமியை தெலுங்கர் என்று உங்களிடம் பரப்பிய அந்த புரட்சியாளர்கள் யாரேனும் இதுவரை கருணாநிதியையோ அல்லது வைகோவையோ தெலுங்கர் என்ற உண்மையை பற்றி உங்களிடம் சொன்னார்களா என கேட்டேன்???
இல்லையே என்றனர்!....
சில புல்லுருவிகள்,
நம்மில் யார் தலைமைக்கு வந்தாலும் அவர்களை பற்றி அவதூறு பரப்புவதின் மூலம் நமது பொது எதிரிகளுக்கு காட்டிக்கொடுக்கும் வேலையை செய்வதே,
இது போன்ற பிரச்சாரங்கள் எல்லாம் என அவர்களுக்கு விளக்கியதோடு,
அப்படியான துரோகிகள் நம் பொது எதிரிகளை பற்றி வாயே திறப்பதுமில்லை என அவர்களுக்கு விளக்கினேன்....
மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடி ஒளிபவனெல்லாம்,
மக்களுக்காக தன்னால் முடிந்ததை செய்பவர்களை வெட்டியாய் குறைப்பேசி திரிகின்றனர்???
எனக்கும் கூட அவர் பேசும் சில கருத்துக்களில் உடன்பாடு இல்லை தான்!,
அதற்காக அவர் உறவே இல்லை என்றாகிவிடுமா என்ன???
மறுபடியும் சொல்கிறேன்,
மருத்துவர் கிருஷ்ணசாமி தெலுங்கர் என்றால் நானும் தெலுங்கர் தான்!!!
அவர் கருத்தியல் அல்லாமல் அவரை தெலுங்கர் என பரப்பி வீழ்த்த நினைத்தால்,
அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்!!!....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக