ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

தத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…

தத்தளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா்…….
தமிழகத்தில் கனமழை கடந்த ஒரு மாத காலமாக பெய்து வருகிறது. இம்மழையில் பெரும் பாதிப்புக்குள்ளான கடலூா் மாவட்டம், சென்னை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் போன்றவை ஆகும். கடலூா் மாவட்டத்திலும் சென்னை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை பல அரசியல் கட்சி தலைவா்கள், பிரமுகா்கள் சென்று ஆறுதல் கூறியும், உணவு உடை வழங்கியும் போட்டோவுக்கு போஸ்ஸீம் கொடுத்தனா். சிலா் தனது கட்சிக் கொடியை அறிமுக படுத்திக்கொண்டே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனா். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவா்களுக்கும், பிரமுகா்களுக்கும் சென்னை மற்றும் கடலூா் போன்ற மாவட்டங்கள் கண்ணுக்கு தெரிந்ததே தவிர, தென்தமிழகத்தின் முத்து நகரமான தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதே வருத்தப்படக்கூடியது. ஆனால் ஒரே ஒரு அரசியல் கட்சி தலைவா், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் அய்யா அவா்கள் மட்டும் தான் இன்றைய நாள் வரை தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து வருகிறார்.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடியில் முகாமிட்டு தனது தொகுதிக்கு உட்பட்ட ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கு சென்று வெள்ளநீா் பாதித்த இடங்களை பார்வையிட்டு, மக்களுக்கு உணவு, உடை, அரிசி ஆகியவைகளை வழங்கிட தனது கட்சியின் பொறுப்பாளா்களுக்கு உத்திரவிட்டா். மேலும் அனைத்து சமுதாய மக்களின் குறைகளை கேட்டு அவா்கள் வெள்ளத்தால் எவ்வளவு பாதிப்பு அடைந்துள்ளார்கள் என்பதை வீடு வீடாக சென்று மதிப்பீடு செய்யவும் தனது கட்சிகாரா்களுக்கு உத்தரவு பிறபித்தார். மேலும் டாக்டா் அய்யா அவா்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்த்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனே தொடா்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். ஒரு தாலுகாவில் வெள்ளநீரை சமாளிக்க முடியாத மாவட்ட ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று அறிக்கையும் வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம குறிஞ்சி நகரில் தேங்கி இருந்த வெள்ளநீரை அதிகாரிகள் வெளியேற்றும் வரை தா்ணா போராட்டம் மேற்க்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளம், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் விவசாய நிலங்களை பைக்கில் சென்று பயணம் செய்து பார்வையிட்டார். தனிநபா் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க உடனடி நடவடிக்கை மேற்க்கொண்டார். தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு எந்த ஒரு உதவியும் செய்யாதததை கண்டித்து சாலை மறியலிலும் ஈடுபட்டார். பல இடங்களில் பொதுமக்களும் வெள்ளநீரை வெளியேற்றாததைக் கண்டித்து சாலை மறியல் செய்தனா்.
டாக்டா் அய்யா அவா்கள் தனது தொகுதி மட்டும் அல்லாமல் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை இரவு, பகல் என்று பாராமலும் உணவு வேளை என்றும் பாராமலும் தூத்துக்குடி மக்களை கவனித்து வந்தார். தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்கிட பல அறிக்கை விட்டும், ”செவிடன் காதில் சங்கு ஊதினார் போல” தமிழக அரசு கண்டு கொள்ள வில்லை. ஆதலால் டாக்டா் அய்யா அவா்கள் இன்று மதுரை உயா்நீதி மன்றத்தில் - தூத்துக்குடி மாவட்ட வெள்ள நிவாரணப்பணியில் வெள்ளநீரை வெளியேற்றுவதில் சுணக்கம் காட்டும் மாவட்டநிர்வாகம் போர்கால அடிப்டையில் நடவடிக்கைஎடுக்க வலியுறுத்தியும், வெள்ள நிவாரண பணியை மேற்பார்வையிட நீதி மன்ற மேற்பார்வையில் குழு அமைத்திட உத்திரவிட கோரியும் வழக்கு தொடரபட்டுள்ளது. இந்த வழக்கில் டாக்டா் அய்யா அவா்களே நேரடியாக வாதிட்டார்கள். மதுரை உயா்நீதி மன்றமும் உடனடியாக வெள்ள நீர் அகற்ற அரசு நடவடிக்கை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்திரவு பிறபித்துள்ளது. இவ்வழக்கில் புதிய தமிழகம் கட்சியின் வழக்கறிஞா்களான திரு. பாஸ்கா் மதுரம், திரு. கனகராஜ், திரு.பவுன்ராஜ், திரு.குமார், திரு.கார்மேகம், திரு.வீரபாண்டி ஆகியோர் டாக்டா் அய்யாவுடன் உடன் இருந்தனா்.
தமிழகத்தில் நிகழ்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சணையை உயா்நீதி மன்றம் வரை சென்று மக்களின் துன்பங்களை துடைத்த புதிய தமிழகம் டாக்டா் அய்யா அவா்களை போன்று தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவா்களை எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து நான் கண்டது இல்லை.
எனவே தத்தெளித்த தூத்துக்குடியை தத்தெடுத்த தனிநபா் – டாக்டா் அய்யா அவா்களை சாரும் என்பதில் சொல்வதில் இன்றியமையாதது.
நன்றி.
------------- என்றும் டாக்டா் அய்யா அவா்களின் வழியில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக