ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

வரவேற்க்கிறேன் ....!!!,

வரவேற்க்கிறேன் ....!!!,..நேற்று 30.9.2015 தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பரமகுடியில் உள்ள ஐயா இமானுவேல் சேகரன் நினைவு இடத்திலும்,முதுகுளத்தூரில் உள்ள வீரன் சுந்தரலிங்கம் திருஉருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..தேவேந்திரர்களின் நமக்கு நாமே ... திட்டம் ..... சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது . தமிழகத்தின் பிரதான கட்சிகள் தங்கள் வாக்கு வங்கியை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உ ள்ளன ... திமுக தனது இருப்பை காட்டிக்கொள்ள திராவிட திருமகன் ஸ்டாலின் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் சில நாடகங்களை நடத்தி வருகின்றார் .. தென் மாவட்டங்களில் சுற்று பயணம் செய்துவருகின்றார் .... நேரடி விவாதம் வேறு நடத்துகின்றார் ...தேவேந்திர குல மக்கள் என்ன செய்து கொண்டு இருகின்றீர்கள் ..?.... அவரை சந்தித்து திமுக ஆட்சி அமைந்தால் " தேவேந்திர குல வேளாளர் " என்று அறிவிக்கப்படுமா ..?.....திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பீர்களா ..?.... ஏன் தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை ..?.. எத்தனை அமைச்சர் பதவி கொடுப்பீர்கள் ..?.... ............................போன்ற கேள்விகளை எழுப்பலாமே ..?.....நமக்கு உ ரிய அரசியல் அதிகாரம் , நமது கோரிக்கைகளை ஏற்காத கட்சிகளுக்கு நமது வாக்குகள் இல்லை என்பதை தெளிவுபடுத்தலாமே ..?.... என்று எனது முகனூலில் பதிவு செய்து இருந்தேன்..அதற்க்கு பதில் சொல்லும் விதமாக மு.க .ஸ் டாலின் அவர்கள் பரமக்குடியில் அய்யா இம்மானுவேல் சேகரனுக்கும் , முதுகுளத்தூரில் தளபதி சுந்தரலிங்ககுடும்பனார் அவர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை மனதார வரவேற்கிறேன் ... இதே அணுகுமுறையை திமுகவில் தேவேந்திர குல சமுகத்திற்கு உ ரிய பிரதிநிதித்துவமும், எங்கள் மக்களின் கோரிக்கைகளை திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ...நன்றி ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக