ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2016

தமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும்.....தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் .........டாக்டர் ...கிருஷ்ணசாமி. M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தல்...

.தமிழகத்தில் நெல்லை, திண்டுக்கல், வால்பாறை, கோத்தகிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இத்தோட்டங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை. தமிழக அரசு, தோட்ட உரிமையாளர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தேட்ட தொழிலாளர்களுக்கு தினமும் சம்பளமாக ரூ.220 வழங்கப்படுகிறது. கேரளா தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகை சேர்த்து ரூ.370 வழங்கப்படுகிறது. அதுபோல், தமிழகத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக