ஏரும் போரும் எம் குலத்தொழில்...! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.-திவாகர நிகண்டு- செருமலை வீரரும் திண்ணியோரும் மருத நில மக்களும் மள்ளர் என்ப-பிங்கல நிகண்டு சேர சோழ பாண்டியமூவேந்தர் மரபினர் யாம்.

புதன், 28 டிசம்பர், 2016

தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ..............!!!.. தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் !!!.

தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றமும் ..............!!!.. தேவேந்திர குல வேளாளர் அரசு ஆணையும் !!!.
தேவேந்திர குல வேளாளர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வோரு சமுதாயமும் தங்களுடைய அடையாளத்திற்க்காக போராடி வருகின்றனர். காலாடி, பண்ணாடி, வாதிரியான், தேவேந்திர குலத்தான், பள்ளன் மூப்பன் போன்ற பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கக் கூடிய ஒரே சமுதாய மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்று தேவேந்திர குல மக்கள் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக போராடியும், குரல் கொடுத்தும் வருகிறார்கள்... கடந்த திமுக ஆட்சியில் நீதிபதி ஜனார்த்தனம் அவர்கள் தலைமையில் ஒரு தனி நபர் கமிசன் அமைக்கப்பட்டது ..
அதுவும் அரசியல் காரணங்களுக்காக , தேவேந்திரர் சமுக வாக்குகள் திமுகவிற்கு கிடைக்காது என்று தெரிந்து அந்த கமிசனையும் , தங்கவேலு அவர்களுக்கு MP பதவியும் அளித்தார்கள் . தேவேந்திரர் சமுகமக்களின் அரசியல் அடையாளம் புதிய தமிழகம் கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்த அதிமுக இன்று வரை இது பற்றி வாய் திறக்கவில்லை .... மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் டாக்டர் . அய்யா அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தார்கள் . மக்கள் மன்றத்தில் மாநிலம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்தினார்கள் . ஆனால் இந்த அதிமுக அரசு இன்று வரை நிறைவேற்ற தயங்குவது ஏன் ..?... ஒரு சின்ன ஒருசொட்டு மையுங்கூட செலவாகாது அதற்க்கு உத்தரவு போடுவதற்க்கு. இன்றைக்கு இருக்கும் அதிமுக அரசிற்கு மனசு வரவில்லை.
திமுக , அதிமுக போன்ற திராவிட கட்சிகளின் அரசாங்கமும் , திராவிட இயக்கங்களும் நம்மை இன்னும் பள்ளர் என்று கூப்பிட்டு சிறுமைப் படுத்தி பார்ப்பதில் தான் அதிமுக , திமுக விரும்புகிறது.... மேலும் பட்டியல் மாற்றம் குறித்து சிந்திக்க தொடங்கிவிட்டனர் ... பட்டியல் இனத்தில் இருந்தே விடு பட வேண்டும் என்று நினைக்க துவங்கி விட்டனர்.
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் தேவேந்திர குல மக்களுடைய பார்வை இப்போழுது ; இந்த அரசாங்கம் தங்களை ஒரு கெளரவத்தோடு அழைப்பதற்க்கு தயங்குகிற காரணத்தினால் இந்த ஒதுக்கீடு- தாழ்த்தப் பட்ட பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வுகள் தேவேந்திர குல மக்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.
இட ஒதுக்கிடே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த இழிவோடு பட்டியலுக்குள் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாக தங்களை பட்டியலில் இருந்து விடுவித்து, எம்.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது .. தேவேந்திர குல மக்களின் மனநிலையை அறிந்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் , டாக்டர் அய்யா அவர்களும் ஆதரித்து தொடர் போராட்டங்களை நடத்த துவங்கிவிட்டார் ... இந்துத்துவ மனநிலை மாற்றப்பட வேண்டும் .... சாதி படிநிலைகளை கொண்ட இந்த இந்து மதத்தை ஒழிப்பது , சாதி ஒழிப்பு என்பதெல்லாம் ஏமாற்று வேலை .....வரலாற்று சிறப்பு மிக்க , வரலாறுகளை , பண்பாடுகளை கொண்ட தேவேந்திரர் சமுகம் , இந்த பட்டியல் இனத்தில் இருப்பதால் இல்லாத இழிவுகளை சுமக்க வேண்டி உ ள்ளது... இன்று தேவேந்திர குல மக்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு பட்டியல் மாற்றம்தான் , அதை நோக்கி பயணிப்போம் ... தேவேந்திரர் சமுக மக்களின் வாக்குகள் தான் அதை தீர்மானிக்கும் , ஆட்சி மாற்றங்கள் ஏற்படலாம் , அதை உ ருவாக்குபவர்களாக தேவேந்திரர்கள் இருக்க வேண்டும் ... நமது கோரிக்கைகள் முன் நிபந்தனையாக வைக்கப்பட வேண்டும் .

1 கருத்து: